Wednesday 4 January 2012

துன்புறுத்தும் தண்டனை..!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள்/ எவன் ஒரு சொத்தை அடைவதற்காகப் பொய் சத்தியம் செய்கின்றானோ அவன்/ தன் மீது அல்லாஹ் கோபம் கொண்டுள்ள நிலையில் அவனைச் சந்திப்பான் என்னும் நபிமொழியைக் கூறிவிட்டு/ இந்த நபிமொழியை உறுதிப்படுத்தி அல்லாஹ்/ எவர் அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கையையும் சத்தியஙகளையும் அற்ப விலைக்கு விற்றுவிடுகின்றார்களோ அவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ் அவர்களிம் பேசவும் மாட்டான்/ அவர்களை (ஏறெடுத்துப்) பார்க்கவும் மாட்டான்/ அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக/ அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைத் தான் இருக்கின்றது என்னும் (3-77) வசனத்தை அருளினான் என்று கூறினார்கள். பிறகு/ அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் எஙகளிடம் வந்து/ அபூ அப்திர் ரஹ்மான் (இப்னு மஸ்ஊத்) உஙகளிடம் என்ன பேசினார் என்று கேட்டார்கள். நாஙகள் அவர் (இப்னு மஸ்ஊத் (ரலி)) சொன்னதை எடுத்துரைத்தோம். அதற்கு அவர்/ உண்மையே சொன்னார். என் விவகாரத்தில் தான் அது அருளப்பட்டது. எனக்கும் இன்னொரு மனிதருக்குமிடையே ஒரு கிணற்றின் விஷயத்தில் தகராறு இருந்து வந்தது/ ஆகவே/ நாஙகள் அல்லாஹ்வின் தூதரிடம் (எஙகள்) வழக்கத்தைத் தாக்கல் செய்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்/ நீ இரண்டு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டும். அல்லது (பிரதிவாதியான) அவர் (குற்றத்தை மறுத்து) சத்தியம் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். அதற்கு நான்/ அப்படியென்றால் அவர் (பொய்) சத்தியம் செய்வாரே/ (பொய் சத்தியம் செய்கிறோமே என்று) கவலைப்படமாட்டாரே என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் எவர் ஒரு செல்வத்தை அடைத்துக் கொள்வதற்காகப் பொய் சத்தியம் செய்கின்றாரோ அவர் (மறுமையில்) தன் மீது அல்லாஹ் கோபம் கொண்டிருக்கும் நிலையில் அவனைச் சந்திப்பார் என்று கூறினார்கள். பிறகு/ இந்த நபி வாக்கை உறுதிப்படுத்தி அல்லாஹ் (தன் வேதத்தில்) வசனம் ஒன்றை அருளினான் என்று கூறிவிட்டு/ 3-77ம் வசனத்தை (இறுதி வரை) ஓதிக் காட்டினார்கள்.
புகாரி-2515-
அபூவாயில் (ரஹ்) 


மூன்று பேரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான், அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். மேலும் அவர்களுக்குத் துன்பமிக்க வேதனையும் உண்டு. ஒருவன்,(மக்களின் பயணப்)பாதையில்-தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பெற்றிருந்தும் வழிப்போக்ர்கள் அதைப் பயன்படுத்த விடாமல் தடுத்து விட்டவன். இன்னொருவன், தன்(ஆட்சித்)தலைவரிடம் உலக ஆதாயத்திற்காகவே விசுவாசப் பிரமாணம் செய்து கொண்டவன், அவர் கொடுத்தால் (மட்டுமே) திருப்தியடைந்து, கொடுக்காமல் விட்டால் கோபம் கொள்பவன். மற்றொருவன், அஸர் தொழுகைக்குப் பிறகு(மக்கள் கடைவீதியில் திரளும் போது)தன் வியாபாரப் பொருளைக் காட்டி, எவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவனும் இல்லையோ அவன் மீது சத்தியமாக! இந்தப் பொருளுக்காக(இதைக் கொள்முதல் செய்யும் போது) நான் இன்ன(அதிக) விலையைத் தந்தேன். என்று கூறி, அதை ஒரு மனிதர் உண்மையென நம்பும்படி செய்தவன் (இப்படி வாடிக்கையாளரிடம் பொய் கூறி அவரை ஏமாற்றி, சொன்ன விலைக்கு அதை விற்றவன்) ஆவான்.
இதைக் கூறி விட்டு,எவர் அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்று விடுகின்றார்களோ.. என்னும் இந்த(3:77) இறைவசனத்தை நபி(ஸல்) அவர்கள் ஓதினார்கள்.
புகாரி-2358-அபூஹூரைரா(ரலி)




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...